இறைவன் - மாயவன் !!!
இல்லா வானம்
நாளும் நம்
கண் காட்டும் மாயவன்!
விதைக்குள் உறங்கும் வித்தகன்!
நாளும் நம்
கண் காட்டும் மாயவன்!
விதைக்குள் உறங்கும் வித்தகன்!
தேடினால் தென்படான்...
எனினும் -
கோடி கோடி அணுக்களுள்ளும்
கூடி நிற்கும் -
ஜோதி அவன்.
எல்லை இலா இறைவன் !!!
ஆவது அறிவான்!
எல்லை இலான்...
எங்கும் உளான்!
கரைகள் இலான்...
கண்ணில் படான்!
ஈசன் விதி !!!
மட மனமே -
ஈசன் விதி நடந்திடுமே!
உழலும் மனமே -
உண்மை அறிந்து
உன்னை மற மனமே!
கந்தன் !!!
சிலையெனினும்...
சிந்தை -
கலந்தவன்
கந்தன்!
கணபதி-
இளவல்...
இவ்வேல்!
சாப நிவர்த்தி வேண்டி !!!
ஊன் கொண்ட உயிர் வேண்டாம்..
உயிர் கொண்ட ஆசை வேண்டாம்...
சக்தி உன் அருள் வேண்டும்...
இருளில் ஒளியாய் நீ வேண்டும்...
அவ்வொளியில் என் பாவம் ஒழிய வேண்டும்...
ஏதன் விதிக்கொரு விடிவு வேண்டும்...
விடிவு முடிவாயின் நின் பாதத்தில் முடிவுறவேண்டும்...
COMMENTS